ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த13 பேரின் உடல்களுக்கு பிரதமர் அஞ்சலி.

by Admin / 10-12-2021 12:10:45am
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த13 பேரின் உடல்களுக்கு பிரதமர் அஞ்சலி.

நீலகிரி மாவட்டம் குன்னுார் மலை பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் குரூப் கேப்டன் வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.

விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உடலுக்கு குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளியில் முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, டிஜிபி சைலேந்திர பாபு, ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, 13 பேரின் உடல்களும் தனித்தனி வாகனத்தில் கோவை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ராணுவ விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.13 பேரின் உடல்களுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.மேலும் முப்படைகளின் தலைமை தளபதி பாபிபின் ராவத் - மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களது மகள்கள்  அஞ்சலி செலுத்தினர்.

 

Tags :

Share via