சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

by Admin / 05-02-2022 03:56:44pm
  சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

 
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சியின் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கும் வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

இதில் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கும் 45 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் 1, 10, மற்றும் 11 ஆகிய மூன்று வார்டுகளிலும் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதனால்1வது வார்டில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த முத்துச்செல்வி, 10ஆவது வார்டில் போட்டியிட்ட ஜெயராமன், 11ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட விமலா ஆகிய மூவரும் எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி இரண்டு பெண்கள் ஒரு ஆண் உட்பட மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
சுயேட்சையாக தேர்வு செய்யப்பட்ட மூன்று வார்டுகளிலும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான  கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்த நிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் சுயேட்சையாக 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது இரு கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 

 

Tags :

Share via