சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

by Admin / 05-02-2022 04:02:10pm
சமையல் எண்ணெய் விலை  உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

 
சமையலில் முக்கிய பங்கு வகிப்பது சமையல் எண்ணை. நாளுக்குநாள் விலை அதிகரிப்பால், சமையல் எண்ணைக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

சமையல் எண்ணை விலை உயர்வால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அந்தவகையில், சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களை இருப்பு வைக்க ஜூன் 30 வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

சிறு விற்பனையாளர் 30 குவிண்டால் வரையும், மொத்த விற்பனையாளர் 100 குவிண்டால் வரையும் இருப்பு வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via