இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

by Staff / 08-09-2023 11:49:02am
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

திருப்பூரை அடுத்த பூண்டி அருகே உள்ள ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த மேத்யூ என்பவரின் மகன் நவீன்குமார் (வயது 28). இவர் நேற்று மதியம் தனது மோட்டார்சைக்கிளில் மங்கலத்தில் இருந்து பல்லடம் நோக்கி சென்றுகொண்டிருந் தார். மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது பின் னால் வந்த டிப்பர் லாரி நவீன்குமாரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via