கூட்டநெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு-நிவாரணம் அறிவிப்பு.

by Editor / 02-07-2024 10:56:03pm
கூட்டநெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு-நிவாரணம் அறிவிப்பு.

உத்தரபிரதேசம், ஹத்ராஸில் ஆன்மிக வழிபாடு நிகழ்ச்சியில் அதிர்ச்சி சம்பவம் கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 122ஆக அதிகரிப்பு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு  உத்தரவு

..நிகழ்ச்சியில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணம் அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்..

மேலும், இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தில் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : கூட்டநெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு-நிவாரணம் அறிவிப்பு.

Share via