அக்காவை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை

by Staff / 29-03-2024 11:46:33am
அக்காவை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை

தருமபுரி ஒகேனக்கல்லை சேர்ந்த ராஜம்மாள், அரசு பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய தம்பி காமராஜ் மீன் பிடிக்கும் தொழிலாளி. ராஜம்மாளுக்கும், காமராஜுக்கும் நிலம் தொடர்பாக சொத்து தகராறு இருந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரியில் காமராஜ், ராஜம்மாளை கத்தியால் குத்தினார். ராஜம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜம்மாள் உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு தருமபுரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், காமராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ் நேற்று தீர்ப்பளித்தார்.

 

Tags :

Share via