குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பெட்டி சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

by Editor / 12-07-2022 10:31:59pm
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பெட்டி சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனிடையே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். அதேபோல் பா.ஜ.க கூட்டணி சார்பாகத் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜூலை 18-ல் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி விமானம் மூலம் சென்னைக்கு  கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டி  தலைமைச் செயலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags : The ballot box for the presidential election was kept safe at the Chennai Chief Secretariat.

Share via