நிதி நிறுவன மோசடி செய்தவர் கைது

by Staff / 16-11-2022 02:40:41pm
நிதி நிறுவன மோசடி செய்தவர் கைது

 மதுரை கடச்சனேந்தல் பகுதியில் ரிஷி வெல்த் மேனேஜ்மென்ட் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் கிறிஸ்டோபர் ஞானராஜ்.முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என இவர் கூறியதை நம்பி பலர் பணம் செலுத்தினர். இந்நிலையில் ரூ. 26. 24 லட்சம் தராமல் மோசடி செய்து தலைமறைவானார். தான் காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுக்க செய்தார். அதே சமயம் மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு டி. எஸ். பி. , பாண்டி செல்வம் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். நேற்றுமுன்தினம் உத்தங்குடி ரிங் ரோடு பகுதியில் கிறிஸ்டோபர் ஞானராஜை இன்ஸ்பெக்டர் மலர்விழி, எஸ். ஐ. , புவனேஸ்வரி, ஏட்டு ஆறுமுகம் ஆகியோர் கைது செய்தனர்.

 

Tags :

Share via