பயங்கர சாலை விபத்து.. 10 பேர் பலி

by Staff / 11-08-2023 05:16:32pm
பயங்கர சாலை விபத்து.. 10 பேர் பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் பயங்கர விபத்து நடந்தது. ராஜ்கோட்-அகமதாபாத் நெடுஞ்சாலையில் பகோதரா கிராமத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, பின்னால் சென்ற மினி லாரி மோதியது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட ஐந்து பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குவர். கோதர்சனத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்களை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via