குற்றாலத்தில் சாதாரண உடையணிந்து வந்து சாலையோர உணவகத்தில் உணவருந்திய அமைச்சர்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலையில் புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார். பின்னர் கடையநல்லூர் பகுதியில் நடந்தவிழாவிலும் கலந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக தற்போது குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் குற்றால வந்த அவர் சாலையோரக் கடைகளையும் மக்களின் கூட்டத்தையும் இரவு நேரங்களில் குற்றாலத்தில் அலைமோதும் மக்கள் கூட்டத்தையும் சுற்றி பார்த்தபடி சாலையோரத்தில் இருந்த உணவகத்தில் திடீரென நுழைந்து அங்கு உணவு அருந்தினார். அமைச்சர் சாதாரண உடை அணிந்து வந்ததின் காரணமாக கடை உரிமையாளர்க்கு அமைச்சர் உணவ்ருந்த வந்த்தைக்கூட அடையாளம் காண முடியவில்லை பின்னர் அவருக்குப் பாதுகாப்புக்கு வந்த பாதுகாப்பு பணிஅதிகாரிகள்,போலீசாரைக்கண்டதும் கடை உரிமையாளர்கள் மற்றும் உணவாக உரிமையாளர் தங்கள் கடையில் வந்து உணவு அருந்தியதும்,பொருட்கள் குறித்து விசாரணை செய்ததும் அமைச்சர் என்று தெரிந்துகொண்டு அமைச்சருக்கு வியாபாரிகள்,பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குற்றாலம் பஜார் பகுதிகளில் சாதாரணமாக வலம் வந்து அனைவரையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
Tags : The Minister came to Courtalam dressed in plain clothes and dined at a roadside restaurant