சிறுமி குடும்பத்தினரைதொலைபேசியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கோவையில் வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவம் மனித நேயமற்ற மன்னிக்க முடியாத குற்றம் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும் அவர்களுக்கு நீதி கிடைக்க துணை நிற்போம் என்றும் அவர் உறுதி அளித்துள்ளதோடு வழக்கை மிக விரைவாக விசாரித்து நீதிமன்றத்தில் உடனடியாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவைத்துள்ளார் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சிறுமியின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்
Tags :



















