அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஹைதியில் இருந்து அமெரிக்கா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் ஒரு குழந்தை உட்பட 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நாட்டில் வறுமையும் வன்முறையும் அதிகரித்ததால் ஏராளமானோர் அமெரிக்காவில் தஞ்சம் அடைய ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நியூ தீவில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் கடலில் கவிழ்ந்தது 60 பேர்வரை படகில் பயணம் செய்த நிலைகள் 25 பேர் உயிருடன் 17 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் கடலில் மாயமான அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags :