குடியரசு தலைவரை சந்தித்தார் ஆளுநர்

by Editor / 10-07-2021 12:44:14pm
குடியரசு தலைவரை சந்தித்தார் ஆளுநர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணிக்க உள்ளதாக நேற்று மாலை திடீரென அறிவிப்பு ஒன்று வெளியானது. டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக அரசியல் களம், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்ததன் பேரில் இன்று காலை டெல்லி புறப்பட்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

டெல்லி சென்றடைந்த அவர் முதலில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்தார். இதைத்தொடர்ந்து தற்போது, குடியரசு ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசி வருகிறார். பின்னர், இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி சென்றிருக்கிறார் பன்வாரிலால்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம், ஆளுநர்கள் மாற்றம் என மத்திய அரசு பரபரப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டது உற்று நோக்கப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றம் செய்யப்படலாம் என்றும் தமிழக ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது 

 

Tags :

Share via