ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்: இளம் தம்பதி தற்கொலை

ராஜஸ்தான்: ஆன்லைன் விளையாட்டின் மூலம் கடனாளியான இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் தீபக் ரத்தோர் - ராஜேஷ் ரத்தோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரூ.5 லட்சம் கடன் ஏற்பட்டதால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று தீபக் தனது சகோதரியிடம் கூறியிருக்கிறார். கடனை எப்படியாவது அடைக்கலாம் என சகோதரி சொன்னதை கேட்காமல் தம்பதி துயர முடிவை எடுத்துள்ளனர். போலீஸ் விசாரிக்கிறது.
Tags :