ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் ISI-க்கு தகவல் பகிர்ந்த நபர் கைது

ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டின் போது இந்திய ராணுவத்தின் தகவல்களை பகிர்ந்தவர் கைது செய்யப்பட்டார். பஞ்சாபை சேர்ந்த ககன்தீப் சிங் என்பவர், சிந்தூர் படையெடுப்பின் போது இந்திய ராணுவ இயக்கங்களை பற்றி பாகிஸ்தானின் இடைநிலை உளவுத்துறை ஐ.எஸ்.ஐ-க்கு தகவல் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்நிலையில், உளவுத்துறை அளித்த ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கலிஸ்தான் ஆதரவு தலைவரான கோபால் சிங் சாவ்லாவுடன் ககன்தீப் சிங் தொடர்பில் இருந்தார் என கூறப்படுகிறது.
Tags :