அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர்" முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நாம் கேட்கக்கூடிய முக்கியமான கேள்விகள்.. யார் அந்த சார்? கோட்டூர் சண்முகம் விசாரிக்கப்பட வேண்டிய நபர். அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர். அந்த தெளிவை முதலமைச்சர் சொல்லாமல் எதற்காக நாடகம் போடுகிறார். தொடர்ந்து கேள்விகள் கேட்போம். இதைவிட போறதில்லை" என்று கூறியுள்ளார்.
Tags :