திருச்சியில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்ததற்கு நியாயம் கேட்டு பயிற்சி செவிலியர்கள் போராட்டம்
புதுக்கோட்டையைச் சேர்ந்த பயிற்சி செவிலியர் திருச்சியில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்ததற்கு நியாயம் கேட்டு பயிற்சி செவிலியர்கள் போராட்டம். அரசு சென்னை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை குழு அமைப்பு.
திருச்சியில் தவறான சிகிச்சையால் புதுக்கோட்டையைச் சேர்ந்த பயிற்சி சேவையில் உயிரிழந்ததாக கூறி சக பயிற்சி செவிலியர்கள் மற்றும் உறவினர்கள் நியாயம் கேட்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவகாரம் தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. பயிற்சி செய்து விடியருக்கு அழைக்கப்பட்ட தவறான மருத்துவ சிகிச்சையை அவரது மரணத்திற்கு காரணம் என குடும்பத்தினரும் சக செவிலியர்களும் குற்றம் சாட்டுகின்ற நிலையில் உயிரெழுந்த செவிலியரின் மரணத்திற்கு பொறுப்பாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க கோரியின் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க கோரியும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இந்த மரணம் தற்செயலானதா.. அல்லது தவறான சிகிச்சை நான் இருந்ததா என்பதை முழுமையாக கண்டறிய தமிழக அரசு விசாரணை குழுவை அமைத்துள்ளது மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தடையங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்து அதன் விரிவான அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த அறிக்கை அடிப்படையில் தவறிழைத்தவர்கள் மீது துறை ரீதியான மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :


















