கோவை சூலூரில் வீட்டில் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தி கொலை
கோவை சூலூரில் வீட்டில் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த கார்த்தி, மோகன்ராஜ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த பொழுது கடத்தப்பட்டு இரவு முழுவதும் கொடுமை செய்து முகம் சிதைக்கப்பட்டு டல் குளத்தில் கிடந்ததை காவல்துறையினர். காவல்துறையினர் சிறுமிய உடலை மருத்துவருக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர்களும் உறவினர்களும் கொதித்து போய் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் சித்தியும் தந்தையும் இது போன்ற கொடுமையை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் என்கவுண்டர் செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இது போன்று எந்த குழந்தைக்கும் இனி நடக்கக்கூடாது என்று கூறி கேட்டுக் கொண்டனர்.
கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுமியின் பெற்றோர்களும் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுமியின் கொலை சம்பவத்தை விசாரிப்பதற்காக டி. ஜி பி. கோவை வந்துள்ளார்.
Tags :


















