17வயது சிறுமியை சீரழித்த காதலன் உள்ளிட்ட 3 பேரில் 2 பேர் கைது.

by Editor / 17-03-2023 09:01:08am
17வயது சிறுமியை சீரழித்த காதலன் உள்ளிட்ட 3 பேரில் 2 பேர் கைது.

தென்காசி தைக்கா தெருவை சார்ந்தவர் சுடலைமுத்து மகன் மாதவன் ஆட்டோ டிரைவரான இவர் தென்காசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதி சிறுமியை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மாதவன் அந்த 17 வயது சிறுமியை தென்காசி-இலஞ்சி சாலையிலுள்ள மின்வாரியம் அருகிலுள்ள சிற்றாற்று பாலம் பகுதிக்கு  அழைத்து வந்துள்ளார் பாலத்தின் கீழ் வைத்து அந்த 17 வயது சிறுமியை  பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் தனது நண்பர்களையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து அவர்களுக்கும் அந்த 17 வயது சிறுமியை  விருந்தளித்து கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதவன் மற்றும் அவரது நண்பர் தங்கதுரை மகன் அந்தோனிராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலை மறைவான மற்றொரு ஆட்டோ ஓட்டுனரையும் தேடி வருகின்றனர்.இந்தவழக்கில்  இவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் கைப்பாற்றியுள்ளனர்.மக்கள் நடமாட்டம் மிகுந்த சிற்றாற்று பாலம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டு பலாத்கார சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.பாதிக்கபட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பாட்டுள்ளதாக கூறப்படுகிறது.

17வயது சிறுமியை சீரழித்த காதலன் உள்ளிட்ட 3 பேரில் 2 பேர் கைது.
 

Tags :

Share via