ராகுலால் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் காங்கிரஸ்

by Editor / 18-09-2021 07:41:07pm
ராகுலால்  மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜகோ பங்களா என்ற பத்திரிகை நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜியின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதோடு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்களையும் இந்த பத்திரிகை வெளிப்படுத்தி வருகிறது.இந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் நேற்று (செப்., 17) வெளியான கட்டுரையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மிகக் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளார். அந்த கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது: பிரதமர் மோடியை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியில் முழுமையான ஒருங்கிணைப்பு இல்லை. மோடிக்கு மாற்று சக்தியாக ராகுலை தயார்படுத்த பல தடவை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் ராகுலால் அந்த வாய்ப்புகளில் வெற்றி பெற இயலவில்லை. அவர் அந்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறி விட்டார்.ராகுலால் ஒரு போதும் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது.

மோடிக்கு மாற்று சக்தியாக ராகுல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. மோடியை எதிர்க்கும் ஒரே தலைவராக தற்போது மம்தா பானர்ஜி மட்டுமே உள்ளார். ஒட்டு மொத்த நாடும் மம்தாவின் தேசிய அரசியல் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. மம்தா பானர்ஜியை தேசிய தலைவராக ஏற்க வேண்டும். இதற்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த கட்டுரையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், ராகுலை மிகக் கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது வெளியாகி இருக்கிறது.

 

Tags :

Share via