அத்திவரதர் கோவில் குளம் நிரம்பியது

by Admin / 17-11-2021 04:48:49pm
அத்திவரதர் கோவில் குளம் நிரம்பியது

அத்திவரதர் கோவில் குளம் நிரம்பியது
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் அத்தி வரதர் வைபவ திருவிழா நடைபெறுவது வழக்கம் கடைசியாக 2019-ம் ஆண்டு நடைபெற்றது.
 
 அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள ஆனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல்  பல்வேறு  மாநில, வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். குளத்தில் தற்போது அத்தி வரதர் கோவில் குளம் நிரம்பியதால்  சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு  வருகை தந்து  புகைப்படம் எடுத்து   வருகின்றனர்.

 2019-ம் ஆண்டு நடந்த அத்தி வரதர் திருவிழாவின் போது  கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

 

Tags :

Share via