கரும்பு விவசாயிகளுக்கு 3 லட்சம் கடன்

by Staff / 23-09-2023 02:11:01pm
கரும்பு விவசாயிகளுக்கு 3 லட்சம் கடன்

ராமநாதபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தென்னை மற்றும் கரும்பு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன். தென்னை விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் வேளாண் விளை பொருள்களுக்கான வளாகம் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், கரும்பு விவசாயிகளுக்கு 3 லட்சம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு போதுமான கடன் வசதிகளை நேரடியாக வழங்கினால், அதிகளவு விவசாயிகள் கரும்பு பயிரிட முன்வருவார்கள் என விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via