இறுதிச் சடங்குக்கு வந்தபோது கைவரிசை சொந்த பெரியப்பா வீட்டில் 48 சவரன் நகைகளை திருடிய இளம்பெண் கைது

by Editor / 29-06-2022 03:26:20pm
இறுதிச் சடங்குக்கு வந்தபோது கைவரிசை சொந்த பெரியப்பா வீட்டில் 48 சவரன் நகைகளை திருடிய இளம்பெண் கைது

 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சொந்த பெரியப்பா வீட்டில் 48 சவரன் நகைகளை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கருப்பையா என்பவரின் மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் இறுதிச் சடங்குகளுக்கு பின் வீட்டில் இருந்த 48 சவரன் நகை மாயமானது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் இறுதி சடங்குக்கு வந்த குடும்ப உறுப்பினர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். அதில் கருப்பையாவின் தம்பி மகள் கவுசல்யா பீரோவில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் 25 சவரன் நகைகளை மீட்டுள்ளனர்.

 

Tags :

Share via