மதுரையில் ஆசிரியை வீட்டில் மூன்று லட்சம் நகையை திருடிவிட்டு மற்றொரு சக ஆசிரியை கைது

by Editor / 29-06-2022 03:14:19pm
மதுரையில் ஆசிரியை வீட்டில் மூன்று லட்சம் நகையை திருடிவிட்டு மற்றொரு சக ஆசிரியை கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி விற்ற மற்றோரு  ஆசிரியை கைது செய்யப்பட்டார். திருமங்கலம் சங்கர் நகரைச் சேர்ந்த செந்தில் நாயகி மற்றும் ஹரினா பேகம் ஆகியோர் அங்கு உள்ள மகாத்மா காந்தி பள்ளியில் ஆசிரியராகப் 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் செந்தில் நாயகியின் லேப்டாப்பை கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற ஹரினா பேகம் பீரோவில் இருந்த ஒன்பதரை சவரன் தங்க நகையை எடுத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த செந்தில் நாயகி போலீசில் புகார் அளித்தார் இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஹரினா பேககிடம்  போலீசார் விசாரித்த போது நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்

 

Tags :

Share via