குடும்பமே உயிரிழந்த பரிதாபம்
சென்னை பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில் தாய் ராமலெட்சுமியும் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். மகள், கணவரை இழந்து புற்றுநோயுடன் போராடி வந்த ராம்லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சத்யா என்ற மாணவியை அவரது நண்பர் சதீஷ், திடீரென ரயில் முன் தள்ளிவிட்டதில் தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மகள் இறந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். தற்போது, சத்யாவின் தாய் ராமலெட்சுமியும் உயிரிழந்தார்.
Tags :