ஆட்டிறைச்சி சாப்பிட்ட புது மாப்பிள்ளை சாவு

by Staff / 27-02-2023 12:57:15pm
ஆட்டிறைச்சி சாப்பிட்ட புது மாப்பிள்ளை சாவு

ஈரோடு: பெருந்துறை காஞ்சிக்கோவில் கண்ணவேலம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (36). கூலித்தொழிலாளி. மூலக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜானகி (30). இவருக்கும், பிரகாஷுக்கும் கடந்த 23ஆம் தேதி திருமணம் நடந்தது. விருந்துக்காக இருவரும் ஜானகியின் வீட்டுக்கு 24ஆம் தேதி சென்றுள்ளார். அங்கு பிரகாஷ் ஆட்டு இறைச்சி சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அன்றிரவு பிரகாஷ் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒவ்வாமையால் அவருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு அலறி துடித்துள்ளது. உறவினர்கள் உடனே பிரகாஷை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags :

Share via