வரதமாநதி அணையில் 3 அய்யப்ப பக்தர்கள் நீரில் மூழ்கி பலி.

by Editor / 26-12-2021 07:29:34pm
வரதமாநதி அணையில்  3 அய்யப்ப பக்தர்கள் நீரில் மூழ்கி  பலி.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ளது  வரதமாநதி அணை இந்த நீர்தேக்கத்திற்கு திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் இருந்து இன்று விடுமுறைதினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்துவருகிறது. இந்த நிலையில் இன்று இந்த அணையில் சென்னையை சேர்ந்த அய்யப்ப பகதர்கள் சபரிமலைக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பம் வழியில்  பழனியில் தரிசனம் செய்யவதற்க்காக வந்தவர்கள் வரதமாநதி அணைக்கு வந்துள்ளனர்.இதில் மூன்று அய்யப்ப பக்தர்கள் அணையின் அழகை ரசித்த நிலையில் பின்னர் செஃல்பி எடுத்துள்ளனர்.இதில் 3பெரும் தவறி நீர்த்தேக்கத்தில் விழுந்து பரிதாபமாக பலியாயினர்.இதுகுறித்து ஆயக்குடி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via