சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து தொழிலாளர்கள் 4 பேர் உடல் கருகி பலி.
சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து தொழிலாளர்கள் 4 பேர் உடல் கருகி பலியாகினர் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சிவகாசி அருகிலுள்ள களத்தூரில் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இன்று காலை திடீரென வெடிவிபத்து நடந்த விபத்தில் வெடிமருந்து தயாரிக்கும் போது தீப்பற்றி எரிந்ததாக முதற்கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது இதில் பட்டாசு தயாரிப்பில் இருந்து வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தி கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டதில் குமார், பெரிய செல்வம், ,உட்பட 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல்கருகி உயிரிழந்தனர், அழகர்சாமி முருகேசன் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். புத்தாண்டு நேரத்தில் தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்காமல் தொழிற்சாலை இயங்கியதால் 4 பேர் இறந்து போக காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
Tags :