வைகை ஆற்றில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி

by Staff / 22-05-2024 04:52:41pm
வைகை ஆற்றில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி

மதுரை மாவட்டம் வீரகனூர் அருகே 10 வயது சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து வைகை ஆற்றில் குளிக்கச் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான். தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக தெப்பக்குளம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via