.பலாத்காரத்தால் கர்ப்பம்! கருவுடன் சேர்ந்து பெண்ணும் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை அவருக்கு நன்கு அறிமுகமான இளைஞர் பல முறை பலாத்காரம் செய்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியில் சொல்லாத நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்தே இளைஞர் குறித்து பெற்றோரிடம் சொன்னார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கர்ப்பமான பெண்ணின் வயிற்றில் இருந்த கரு சில தினங்களுக்கு முன்னர் இறந்த நிலையில் அப்பெண்ணும் இன்று உயிரிழந்தார். உடல் உறுப்புகள் செயலிழப்பால் அவர் இறந்ததாக தெரியவந்துள்ளது.
Tags :