சிறுவன் குடும்பத்திற்கு 10இலட்சம் நிவாரணம் - சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை -முதல்வர் ஸ்டாலின்

by Editor / 03-01-2022 10:44:02pm
சிறுவன் குடும்பத்திற்கு 10இலட்சம் நிவாரணம் - சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை -முதல்வர் ஸ்டாலின்

புதுக்கோட்டை,அம்மாசத்திரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 
சிறுவனின் உறவினர்கள் இன்று மாலைமுதல் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உறவினர்களின் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க கோரியும்,அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரியும் நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சிறுவன் புகழேந்தி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் புதுக்கோட்டையில் நார்த்தாமலையில் சிறுவன் புகழேந்தியின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் கேட்டு துயரமடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். சிறுவன் இறந்த சம்பவத்தில் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் முடிவில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via