நாய்க்கூண்டில் அடைக்கப்பட்ட இளம்பெண்

by Staff / 15-10-2022 03:26:52pm
நாய்க்கூண்டில் அடைக்கப்பட்ட இளம்பெண்

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிலிப்பைன்சில் தனது காதலருடன் பப்புக்கு சென்றிருந்தார். பப்பிலிருந்து திரும்பும்போது மர்ம கும்பல் ஒன்று இளம்பெண்ணை காரில் கடத்தி சென்றது. உடனடியாக இதுகுறித்து பெண்ணின் காதலர் போலீசில் புகாரளித்தார். இதனிடையே, காதலருக்கு வந்த வீடியோ அழைப்பு ஒன்றில் அந்த பெண்ணை கட்டி வைத்து பேஸ்பாலால் சிலர் அடித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.பெண் கடத்தப்பட்டு 20 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஒரு ஷாப்பிங் மாலில் அந்த பெண்ணை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் பல மர்ம சம்பவங்கள் வெளிவந்தன. அந்த கடத்தல்க்காரர்கள் தன்னை ஒரு நாய்க்கூண்டில் அடைத்து வைத்திருந்ததாகவும், அதிலிருந்து அவர் தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் சொன்ன தகவல்களின்படி அவர் கடத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்கு காவலர்கள் சென்றுள்ளனர். அந்த இடத்திற்கு சென்றபோது கடத்தல்காரர்கள் அங்கில்லை. அங்கு ஒரு நாய்க்கூண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து எப்படி அந்த பெண் தப்பித்தார் என்பது மர்மமாகவே இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via