முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பினருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான இடம் மட்டும் அல்ல. கருத்து வேறுபாடுகள், விவாதங்களுக்கான இடமும் கூட. தமிழக மாணவர்களை தாக்கி பெரியார், மார்க்ஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களை சூறையாடிய ஏபிவிபி அமைப்பினரின் செயல் கண்டனத்துக்குரியது. அவர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களது உரிமைக்காகவும், ஒன்றிய பாஜகவுக்கு எதிராகவும் போராடும் மாணவர்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை காவல்துறை கைக்கட்டி பார்க்கிறது என கூறினார்.
Tags :