அம்பாசமுத்திரம் கோட்டத்தில் வரும் 20ம் தேதி முதல் 27 ம் தேதி வரை 2024 ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு.

by Editor / 17-02-2024 10:05:25am
அம்பாசமுத்திரம் கோட்டத்தில் வரும் 20ம் தேதி முதல் 27 ம் தேதி வரை 2024 ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் கோட்டத்தில் வரும் 20ம் தேதி முதல் 27 ம் தேதி வரை 2024 ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.

அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்குட்பட்ட மணிமுத்தாறு வன சோதனை சாவடி மற்றும் பாபநாசம் வன சோதனை சாவடிகள் இந்த நாட்களில் தற்காலிகமாக மூடப்படும்.

மேலும் அம்பாசமுத்திரம், முண்டந்துறை, பாபநாசம், கடையம் வனச்சரக வனப்பகுதிகளுக்குள் விதிகளின்படி புலிகள் கணக்கெடுப்பு காலங்களில் சூழல் சுற்றுலா, வழிபாடு மற்றும் ஓய்வு விடுதிகள் முன்பதிவு போன்ற எந்த கரங்களுக்காகவும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தற்காலிகமாக மேற்குறிப்பிட்ட நாட்களில் அனுமதிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன - களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் இளையராஜா தகவல்.

 

Tags : அம்பாசமுத்திரம் கோட்டத்தில் வரும் 20ம் தேதி முதல் 27 ம் தேதி வரை 2024 ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு

Share via