இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் உயரதிகாரி கொல்லப்பட்டார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தஹியேவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் உயரதிகாரி அஹ்மத் அலி பலூத் கொல்லப்பட்டார்.
இஸ்ரேலுக்கும் -ஹிஸ்புல்லாவுக்கும் இடையே கடந்த மாதம் (ஏப்ரல் 2026) அமெரிக்க மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, தலைநகர் அருகே நடந்த முதல் தாக்குதல் இதுவாகும்.இந்த தாக்குதல் தஹியே பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தை இலக்காக வைத்து நடத்தப்பட்டது
.காசா தாக்குதல்:காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைமைப்
பேச்சுவார்த்தையாளரான கலீல் அல்-ஹய்யாவின் மகன் அஸாம் கலீல் அல்-ஹய்யா கொல்லப்பட்டார்.
.மே 6, 2026 புதன்கிழமை இரவு காசா நகரின் தராஜ் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து, பின்னர் உயிரிழந்ததாக ஹமாஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன..
ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.இந்தத் தாக்குதல்கள்
, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் ஆகிய அமைப்புகளுக்கும் இடையிலான பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளன
Tags :


















