கென்யாவின் 5-வது அதிபரானார் வில்லியம் ரூட்டோ

by Staff / 14-09-2022 02:31:02pm
கென்யாவின் 5-வது அதிபரானார் வில்லியம் ரூட்டோ

கென்யாவில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்க நிராகரிக்கப்பட்டதால், அந்நாட்டு அதிபராக வில்லியம் ரூட்டோ இன்று பொறுப்பேற்று கொண்டார்.

ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட 50.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் நாட்டின் 5-வது அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

கென்யாவின் அதிபராக இருந்து பதவி விலகும் உஹுரு கென்யாட்டாவின் துணை அதிபராக வில்லியம் ரூட்டோ இருந்தார். இனிடையே, இந்த வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கென்யாவின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது.

இதையடுத்து, துணை அதிபராக இருந்த வில்லியம் ரூட்டோ அதிபராக இன்று பதவியேற்று கொண்டார். இன்று நடந்த பதவியேற்பு விழாவில் உஹுரு கென்யாட்டாவும் வில்லியம் ரூட்டோவும் கைகுலுக்கி பேசிக் கொண்டது அந்நாட்டு மக்களிடம் மகிழ்ச்சியை எற்படுத்தியது.

 
 

 

Tags :

Share via