எம்.வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் ஏற்பட்டுள்ள ஹன்டா வைரஸ்
எம்.வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் ஏற்பட்டுள்ள ஹன்டா வைரஸ் பரவலை உலக சுகாதார அமைப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது.இதுவரை 5 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது, துரதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒரு பெருந்தொற்றின் தொடக்கம் அல்ல என்று உலக சுகாதார அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.. ஹன்டா வைரஸ் பொதுவாக மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது.கப்பலிலிருந்து இறங்கி, பல்வேறு நாடுகளுக்குச் சென்ற பயணிகளைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து நாட்டு சுகாதார அதிகாரிகள், நோய் உறுதி செய்யப்படுவதற்கு முன்பு கப்பலில் இருந்து இறங்கியவர்களைக் கண்டறிந்து கண்காணித்து வருகின்றனர்.
ஹன்டா வைரஸ் தொற்று பெரும்பாலும் எலிகள் போன்ற கொறித்துண்ணிகளின் சிறுநீர், எச்சில் அல்லது மலம் மூலம் பரவக்கூடியது.
Tags :


















