தொழில்துறை மானியக்கோரிக்கை: புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்

by Editor / 25-04-2025 02:58:15pm
தொழில்துறை மானியக்கோரிக்கை: புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்

தமிழக சட்டப்பேரவையில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை மானியக்கோரிக்கை குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, “நாகையில் 600 பேர் பணியாற்றும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்கா 125 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்” என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo