காட்டு யானை தாக்கி முதியவர் பலி

by Staff / 17-02-2023 03:04:59pm
காட்டு யானை தாக்கி முதியவர் பலி

ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட நெய்தாளபுரம் வடக்கு காவல் சுற்று பகுதியில் பாலபடுகை கிராமத்தை சேர்ந்த பூசாரி மாதேவின் விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார்.இந்த பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் யானை மற்றும் காட்டுறுமை போன்ற விலங்கிகுகள் அதிக அளவில் நடமாடி வருவது வழக்கம்இந்நிலையில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த பூசாரி மாதேவனை வனப்பகுதியிலிருந்து தீடீரென வெளியே வந்த காட்டு யானை தாக்கியதில் மாதேவன் பலந்த காயமடைந்தார்அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் காவல் பணியில் இருந்த வனத்துறையினர் மாதேவன் காயமடைந்த நிலையில் இருப்பதை கண்டு உடனடியாக வனத்துறை வாகனத்தில் ஏற்றி சென்று பாலபடுகை கிராமத்திற்கு கூட்டிச்சென்று உறவினர்களுக்கு தகவல் அளித்த பின்தாளவாடி அரசு மருத்துவமனை க்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கிய சில மணி நேரத்தில் மாதேவன் உயிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மாதேவன் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தாளவாடி காவல் திலையத்தில் வழக்கு பதிவு செய்த பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் இறந்த மாதேவன் பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருப்பதால் அவரது குடும்பத்தார்க்கு தமிழக அரசு சார்பில் ஐந்து லட்சம் நிவாரணத்தொகை அளிக்கப்பட உள்ளதாகவும், மேலும் உடல் அடக்கம் செய்வதற்கு 50 ஆயிரம் வழங்க இருப்பதாகவும் கள இயக்குனர் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via