4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம்: அமைச்சர் நிதியுதவி

by Staff / 17-02-2023 03:01:17pm
4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம்: அமைச்சர் நிதியுதவி

கரூர் மாயனூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவியை காப்பாற்ற முயன்ற மற்ற 3 மாணவிகளும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்கள் நால்வரும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கோங்குடிபட்டி ஊராட்சி பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆவர்.

 

Tags :

Share via