காசிமேடு மீன் சந்தையில் மீன்வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

by Editor / 22-01-2022 07:22:19pm
காசிமேடு மீன் சந்தையில் மீன்வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை காசிமேடு மீன் சந்தையில் கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.தமிழகத்தில்  கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் அரசு ஞாயிற்றுக் கிழமைத்தோறும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.இதன் தொடர்ச்சியாக நாளை ஊரடங்கு என்பதால் இன்றே  காசிமேடு மீன் சந்தையில்  மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போதியளவு போலீசார் பாதுகாப்புஇல்லாத நிலை இருந்துவருவதாகவும்,காசிமேட்டில் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சந்தையில் மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது.
 

 

Tags : Crowds of people flocking to the Kasimeddu fish market to buy fish

Share via