இந்தியா மீண்டும் வெற்றி - தொடரைக்கைப்பற்றியது.
இந்தியா-இங்கிலாந்துக்கிடையேயான டி 20 கிரிகெட் போட்டியின் இரண்டாவது ஆட்டம் பர்மிங்காமில் நடந்தது .டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால்,இந்திய அணி பேட்டிங் செய்தது. எட்டு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 171 எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 121 ரன் எடுத்துஆட்டத்தை முடித்துக்கொள்ள 49 ரன் வித்தியாசத்தில் இந்தியஅணிவெற்றிபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்கிற கணக்கில் வெற்றி வாகை சூடியது மூன்றாவதுகடைசி போட்டி ஞாயிறு இரவு 7.00 மணிக்கு நடைபெறுகிறது..
Tags :