விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

by Writer / 05-01-2022 01:04:13pm
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் வையம்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதிஉதவி அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதாவது,விருதுநகர் மாவட்டம் வையம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவியும் வழங்கி தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும்,பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தமடைந்ததாக அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு
 

Tags :

Share via