மிக்ஜாம் புயல் பாதிப்புகளை, மதிப்பீடு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது

by Admin / 10-12-2023 02:29:57pm
மிக்ஜாம் புயல் பாதிப்புகளை, மதிப்பீடு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை, மதிப்பீடு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது. கடந்த வாரம் மிச்சம் புயல் காரணமாக கனமழை பெய்து சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய சேதத்தை உருவாக்கியது. இதனால் மக்கள் வசிக்கும் வசிப்படங்களில் வெள்ளம் சூழ்ந்து அவர்களுடைய இயல்பு நிலையை சின்னாபன்னமாகியது. வெள்ளத்தின் காரணமாக வீட்டிற்குள் புகுந்த தண்ணீரின் காரணமாக பொருள் சேதம் மிக அதிக அளவில் ஏற்பட்டது. கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதோடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன ..வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் உணவு-குடிதண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மிக சிரமப்பட்டனர். இந்நிலையில், புயலின் பாதிப்பை மதிப்பீடு செய்ய மத்திய குழு நாளை திங்கட்கிழமை தமிழகம் வர உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

 

 

Tags :

Share via