பெண்ணை குளிக்கும்போது படமெடுத்த சிறுவன்

by Staff / 02-01-2024 04:27:04pm
பெண்ணை குளிக்கும்போது படமெடுத்த சிறுவன்

விருதுநகர் மாவட்டம் – திருத்தங்கல்லைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பாத் ரூமில் குளித்துக்கொண்டிருந்த 36 வயது பெண்ணை தனது செல்போனில் மேல்கூரை வழியாக படம்பிடித்துள்ளார். அப்போது செல்ஃபோன் வெளிச்சம் மேல பட்டவுடன் அதிர்ச்சியடைந்து மேலே பார்த்தபோது சிறுவன் அங்கிருந்து மறைந்துள்ளான். பின்னர் அவனை அழைத்து விசாரித்தபோது, இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னை கொன்றுவிடுவேன் என கூறி அந்த பெண்ணை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு திருத்தங்கல் காவல்நிலையத்தில் புகாரளிக்க, அந்த சிறுவன் மீது வழக்கு பதிவாகியிருக்கிறது.

 

Tags :

Share via

More stories