அதிமுக நிர்வாகி ஆனந்த் பாபு கட்சியில் இருந்து நீக்கம்

மூதாட்டி கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி ஆனந்த் பாபு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் ஆனந்தபாபு கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :