பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? இபிஎஸ், ஓபிஎஸ் 

by Editor / 26-07-2021 03:40:25pm
 பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? இபிஎஸ், ஓபிஎஸ் 



அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியாக  டெல்லி சென்றனர். இருவரும் ஒரே நாளில் தனித்தனியாக டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் , நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறையில், பிரதமர் மோடியை ஒ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேசினர்.
பிரதமர் மோடியுடன் சுமார் 35 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்திய இருவரும் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழ்நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். அதிமுகவில் எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்

 

Tags :

Share via