தாலுகா அலுவலகத்திற்குச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் திடீர் மாயம் -- போலீசார் விசாரணை

by Staff / 01-09-2024 04:02:23pm
 தாலுகா அலுவலகத்திற்குச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் திடீர் மாயம் -- போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கப்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், இவரது மகள் செண்பகச் செல்வி, இவர் ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட சங்கம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக (தலையாரி) பணியாற்றி வருகிறார். நேற்று பணி நிமித்தமாக தாலுகா அலுவலகம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.  இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் ‌ பசுவந்தனை  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பசுவந்தனை காவல் ஆய்வாளர் முத்துமணி வழக்கு பதிவு செய்து காணாமல் போன செண்பகச் செல்வியை தேடி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.....

 

Tags :

Share via