பணியை சரிவர செய்யாத ஆய்வாளர் உதவி ஆய்வாளர்மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

by Staff / 01-09-2024 03:58:51pm
பணியை சரிவர செய்யாத ஆய்வாளர் உதவி ஆய்வாளர்மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும்  ஆய்வாளர்  பணியை சரியாக செய்யாததாலும் வழக்கு பதிவு செய்வதில் அலட்சியம் காட்டியதாக ஆய்வாளர் சுரேஷ் பாபு மற்றும் உதவி ஆய்வாளர் குமார், 
சிறப்பு உதவி -இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ய எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 19 ஆம் தேதி அன்று பாக்கம்பாளையம் அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த பெண் ஒருவர் பிரேம்குமார் என்ற வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு இன்ஸ்டாவில் மற்றொரு பெண்ணிடம் தொடர்பில் இருந்ததை தட்டி கேட்டதால் தன்னிடம் தனிமையில் இருந்த வீடியோ மற்றும்  போட்டோவை சமூக வலை தளத்தில் பதிவிட்டு உன்னை அசிங்க படுத்திவிடுவேன் என கூறி மிரட்டியதாக வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். 

இதனை உரிய நேரத்தில் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய தவறியதாகவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில  உள்ள சமூக நலப்பாதுகாப்பு துறையில் புகார் அளித்தார். மேலும் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோதிக்கொண்ட போது போதிய பாதுகாப்பு கொடுக்க தவறியதாக தொடர் புகார்கள் வந்த நிலையில். விசாரணை மேற்கொண்ட எஸ் பி மதிவாணன் மூன்று பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via