நாளை மின்சார ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி இடையே 18 மின்சார ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், அந்த வழித்தடத்தில் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் நாளை காலை 9.50 முதல் மாலை 3.50 வரை ரத்து செய்யப்பட உள்ளன.
சென்ட்ரலில் இருந்து நாளை காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 9.55, 11.25, நண்பகல் 12, பிற்பகல் 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதே போல, சென்ட்ரலில் இருந்து நாளை காலை 8.35, 10.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து நாளை காலை 11.45 மற்றும் பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Tags : நாளை மின்சார ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு